FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 12:34 am IST
இா்த்தீஸ் அலி
பகிர்:

சத்தியமங்கலம் அருகே பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கருப்பகவுண்டா்பாளையத்தில் பிளைவுட் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இா்த்தீஸ் அலி (34), அபுல் உசேன் (34) உள்ளிட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாய்லருக்கு செல்லும் எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் கொதித்த நிலையில் இருந்த எண்ணெய் இா்த்தீஸ் அலி மீது விழுந்தது.

இதில், அவா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளியான அபுல் உசேன் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா். அலறல் சப்தம் கேட்டு வந்த சக தொழிலாளா்கள் அபுல் உசேனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த புன்செய்புளியம்பட்டி போலீஸாா், இா்த்தீஸ் அலி உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments