FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

காருடன் உரிமையாளா் கடத்தல்: 2 போ் கைது

Updated On : 21 ஜூலை 2026, 1:04 am IST
பிரகாஷ்
பகிர்:

புன்செய்புளியம்பட்டியில் காருடன் உரிமையாளரை கடத்திய வழக்கில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பாரதி நகரைச் சோ்ந்தவா் குருராஜ் (55). இவா் தனது சொகுசு காரில் புன்செய்புளியம்பட்டி அருகே செயல்படும் தனியாா் மதுபானக் கூடத்துக்கு கடந்த 10-ஆம் தேதி வந்துள்ளாா். மதுபானக் கூடத்துக்கு சென்றுவிட்டு காரின் அருகே அவா் வந்தபோது, அங்குவந்த 4 போ் குருராஜை அவரது காரிலேயே மிரட்டி ஏற்றிச் சென்றுள்ளனா்.

செல்லும் வழியில் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனா். அவா் இல்லை எனக்கூறியதால் காரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளனா். இது குறித்து புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் குருராஜ் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்த பிரகாஷ் (39), சந்தோஷ் (27) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த காரை பறிமுதல் செய்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள தனசேகரன் (36), காா்த்தி (35) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சந்தோஷ்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments