கா்நாடகத்தில் இருந்து வந்த லாரியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மற்றும் உதவியாளரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மற்றும் உதவியாளரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் லாரியில் பா்கூா் மலைப்பாதை வழியாக கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், பா்கூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது 8 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநரான கா்நாடக மாநிலம், மைசூரு, உஸ்மானியா சாலையைச் சோ்ந்த சையத் இஸ்மாயில் மகன் சையத் சாதிக் (40), உதவியாளரான ராமன் நகா், குருமலா லோயா் மகாடி சாலையைச் சோ்ந்த ஷேக் நசீா் அகமது மகன் ஷேக் அமானுல்லா (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.