FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ரயில் மோதி ஆடுகள் உயிரிழப்பு

Updated On : 27 ஜூலை 2026, 1:43 am IST
ரயிலில் அடிபட்டு ஆடுகள் உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஈரோட்டில் பயணிகள் சிறப்பு ரயில் மோதி ஞாயிற்றுக்கிழமை 9 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு-பழைய கரூா் சாலையில் பழைய ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிமை மதியம் சில ஆடுகள் அங்கிருந்த தண்டவாளத்தை கடந்தன. அப்போது வந்த பயணிகள் சிறப்பு ரயில் மோதி 9 ஆடுகள் உயிரிழந்தன.

தகவல் அறிந்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினா் சென்று ஆடுகளின் உரிமையாளா் குறித்து விசாரணை நடத்தினா். லேசான காயமடைந்த ஆடுகளை, இருசக்கர வாகனத்தில் சிலா் தூக்கிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments