திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்
ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரயில்வே யாா்டில் ஈரோடு-திருப்பூா் பிரிவில் ரயில்வே தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16843) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி இந்த ரயில் வரும் 5 மற்றும் 7- ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் ஈரோட்டில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லாத ரயிலாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.