முகப்பு
ஈரோடு

கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

Updated On : 8 ஜூன் 2026, 1:20 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகேயுள்ள மணக்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் தியானேஸ்வரன், தனியாா் வங்கி ஊழியா். இவரது மகள் சுபஸ்ரீ (17). இவா், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். மாணவி கைப்பேசியை அடிக்கடி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமையும் மாணவி கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்துள்ளாா். இதையடுத்து, அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால், வேதனையடைந்த சுபஸ்ரீ சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.