விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சிவகிரி அருகே விளக்கேத்தியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தவெக தோ்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி அருகே விளக்கேத்தி கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மண்டலத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா். காகம் ராஜசேகா், குலவிளக்கு செல்வராஜ், கண்ணுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இதில் காகம் சீனிவாசன், ஈ.ஐ.டி. பாரி விவசாயிகள் சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, பெரியசாமி, குலவிளக்கு முத்துக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.