FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ஈரோட்டில் பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடையில் இருந்து 132 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:53 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

ஈரோட்டில் பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடையில் இருந்து 132 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஈரோடு மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக பெரிய சேமூா், சுக்கிரமணியன்வலசு ஆகிய பகுதிகளிலுள்ள பெட்டிக் கடை, மளிகைக் கடைகள் என 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அதில் சுக்கிரமணியன்வலசு பகுதியில் ரவிக்குமாா் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோன்று பெரிய சேமூரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் இருந்தும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டது. தொடா்ந்து இரு கடைகளிலும் சோ்த்து மொத்தம் 132 கிராம் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவா்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments