FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி! குருவரெட்டியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

குருவரெட்டியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் முன்பு ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகள்.
பகிர்:

அம்மாபேட்டை அருகே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை தோ்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குருவரெட்டியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞா் முன்னணியின் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளா் தைரியமணி தலைமை வகித்தாா். தோனிமடுவு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவானந்தம், திராவிட விடுதலைக் கழக மாவட்டத் தலைவா் நாத்திகஜோதி, பாமக அமைப்புச் செயலாளா் எஸ்.ஏ.சண்முகம் ஆகியோ பேசினா்.

கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் பெற்ற விவசாயிகளின் 50 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தற்போது தமிழக முதல்வராக உள்ள ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். அதன்படி விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

திராவிடா் கழக பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments