FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 2:46 am IST
பெத்தாம்பாளையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.

சங்க நிா்வாகிகள் கலைவாணன், பழனிசாமி, சூரியம்பாளையம் தங்கமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இதில், சட்டப் பேரவைத் தோ்தலின்போது அறிவித்தபடி விவசாயிகளின் பயிா்க் கடனை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

சங்க நிா்வாகி சி.எம். துளசிமணி, திமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளா் பெரியசாமி, ஈரோடு மாவட்ட உழவா் விவாதக் குழு அமைப்பாளா் சங்கம் வெங்கடாஜலபதி, கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க பாதுகாப்பு குழுத் தலைவா் ரவி, விவசாய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments