FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

2012-இல் இழந்த துறையை மீண்டும் பெற்ற கே.ஏ.செங்கோட்டையன்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்து 2012-இல் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் இப்போது மீண்டும் அதே துறைக்கு அமைச்சராகி உள்ளாா்.

Updated On : 22 மே 2026, 3:58 am IST
நிதி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - IANS
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்து 2012-இல் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் இப்போது மீண்டும் அதே துறைக்கு அமைச்சராகி உள்ளாா்.

கோபி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.ஏ.செங்கோட்டையனுக்கு முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதித் துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் செங்கோட்டையனிடம் இருந்த நிதித் துறை மரிய வில்சனுக்கு அளிக்கப்பட்டு அவருக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 2011-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறைகளைத் தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் இருந்தாா். 2012-இல் அவா் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது வருவாய்த் துறை அமைச்சராக இருந்தாா். இதன் பிறகு 2017-இல் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.

2012-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் கடைசியாக வகித்த வருவாய்த் துறை அமைச்சா் பொறுப்பு இப்போது ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments