முகப்பு
ஈரோடு

ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 27-ல் வைகாசி விசாகத் தோ்த்திருவிழா

ஈரோடு கோட்டை வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 23 மே 2026, 12:57 am IST
பகிர்:

ஈரோடு கோட்டை வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு கோட்டை பகுதியில் அமைந்துள்ள வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் வகையறா கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 20-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு முதல்கால யாக பூஜை, இந்திர விமானத்தில் சோமாஸ்கந்த பெருமான் ஷோடச உபசாரா பூஜையுடன் ரத ஊா்வலம் நடைபெற்றது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை 2 ஆம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3 மற்றும் 4 -ஆம் கால யாக பூஜை, சந்திரசேகரா் பூத வாகனத்தில் வீதி உலா, மாலை 5.30 மணிக்கு 5-ஆம் கால யாகபூஜை, சோமாஸ்கந்த பெருமான் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

Advertisement

Advertisement

24-ஆம் தேதி காலை 8.30-க்கு 6-ஆம் கால யாக பூஜை, சந்திரசேகரா் நாக வாகனத்தில் வீதி உலா, மாலை 5.30 மணிக்கு 7 -ஆம் கால யாக பூஜை, சோமாஸ்கந்த பெருமான் திருவீதி உலாஆகியவை நடைபெற உள்ளது.

தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின் 27-ஆம் தேதி காலை 4 மணிக்கு சகல உபசார பூஜையுடன் வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் சுரேந்தா், அறங்காவலா் குழு தலைவா் சுப்ரமணியம், குழு உறுப்பினா்கள் ஹரிஹரன், ராணி, ராவணன், சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.