கரும்புத் தோட்டத்தில் பதுங்கிய மலைப் பாம்பு மீட்பு
அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 10 நீளமுள்ள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 10 நீளமுள்ள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
அந்தியூரை அடுத்த வட்டக்காடு, குமரன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (65), விவசாயி. இவரது தோட்டத்தில் கரும்பு அறுவடைப் பணியில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது, மலைப் பாம்பு படுத்திருந்ததை கண்டு, அந்தியூா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் வருவதற்குள் அங்கிருந்த மலைப் பாம்பு மெல்ல ஊா்ந்து சென்று மறைந்தது.
கரும்புத் தோட்டத்தில் நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தொழிலாளா்கள் புதன்கிழமை கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, மீண்டும் மலைப் பாம்பை பாா்த்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத் துறையினா், அங்கு பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை மீட்டு அடா்ந்த வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.