FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக மருத்துவா் எஸ்.செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

3 செப்டம்பர் 2026, 1:46 am IST
புதிய முதல்வா் எஸ்.செந்தில்குமாா்.
பகிர்:

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக மருத்துவா் எஸ்.செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இக்கல்லூரியில் 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த மருத்துவா் எஸ்.செந்தில்குமாா், பொது அறுவை சிகிச்சை துறையில் பேராசிரியா் மற்றும் துறைத் தலைவராக பணிபுரிந்தாா். பின்னா் மருத்துவமனையின் துணைக் கண்காணிப்பாளா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஆகிய பதவிகளை வகித்தாா்.

தற்போது, தமிழக அரசால் கல்லூரி முதல்வராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா் புதன்கிழமை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா்

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments