FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மசினகுடி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி மசினகுடி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி மசினகுடி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
யானை வழித்தட நிலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மசினகுடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் ரிசார்ட் வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வரும் பரபரப்பான நிலையில், மசினகுடி கிராமத்தில் நடைபெற்ற இந்த கிராம சபைக்கூட்டத்தில் மசினகுடி ஊராட்சிக்குள்பட்ட வாழைத்தோட்டம்,  மாவனல்லா, செம்மநத்தம்,  மாயாறு,  பூதநத்தம்,  தெப்பக்காடு, சிங்காரா மற்றும் ஆச்சக்கரை  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். 
 இக்கூட்டத்தில், வன உரிமை அங்கீகார  சட்டத்தின்கீழ் பழங்குடியினர் உள்ளிட்ட அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டுமெனவும்,  வனப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் யானை வழித்தட நிலங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கஜா 2011 அறிக்கையை மக்கள் பாதிக்காதவாறு செயல்படுத்த  வேண்டுமெனவும், மக்களை பாதிக்கும் பிரிவு 125ஐ உடனடியாக நீக்க வேண்டுமெனவும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments