FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உதகையில் நடுங்கும் குளிரிலும் கேரல்ஸ் நிகழ்வுகள்

கிறிஸ்துமஸ் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நினைவுக்கு வரும் நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கிறிஸ்துமஸ் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நினைவுக்கு வரும் நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து ஒவ்வோர் கிறிஸ்தவ ஆலயத்திலும் பூபாளம் என அழைக்கப்படும் கேரல்ஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
இது கிறிஸ்து பிறப்பை முன்கூட்டி அறிவிக்கும் நிகழ்வாக மட்டுமல்லாமல், சாதி, மத, பேதமின்றி அனைவரும் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டுமென்பதை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. 
இரவு நேரங்களில் தொடங்கும் பூபாள நிகழ்ச்சிகள் சில நாள்களில் நள்ளிரவு வரையிலும் தொடர்கின்றன. இதில் உதகை புறநகர்ப்  பகுதிகளில் நடுங்கும் குளிரிலும் பூபாளக் குழுவினரை வரவேற்க  மக்கள் காத்துக்கொண்டிருப்பர். 
உதகையில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூபாள பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உதகை அருகேயுள்ள வண்டிசோலை பகுதியில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் சார்பில் கிறிஸ்துமஸ்  பூபாள பாடல்  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
இத்தேவாலயத்தின் பூபாளக் குழுவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பங்குத் தந்தை ஸ்டானிஸ் தலைமையிலும்,  உதவி பங்குத் தந்தை டோமினிக் முன்னிலையிலும் கடந்த 1ஆம் தேதி தொடங்கி, தேவாலயத்துக்கு உள்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் சென்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பைக் குறித்தும், குழந்தை இயேசுவின் உருவ சிலையை வைத்து பாடல்கள் பாடியும்,  பிரார்த்தனைகள் செய்தும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 
இதேபோல, பிங்கர்போஸ்டு, பட்பயர் பகுதிகளில் அருட்திரு பிரபு தலைமையிலும், குருசடி பகுதிகளில் அமிர்தராஜ் தலைமையிலும் பூபாளக் குழுவினர் பாடல்களைப் பாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments