முகப்பு
நீலகிரி

உதகை மலா்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்தனா்!

உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா்.

Updated On : 18 மே 2025, 12:32 am IST
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்களால் அமைக்கப்பட்டுள்ள அரண்மனையை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான மலா்க் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி தொடங்கியது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதில், 10 லட்சம் மலா்களால் ஆன பிரம்மாண்டமான அரண்மனை உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் மலா்களால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் உள்ள மரங்கள் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனா். தொடக்க நாள் முதல் சனிக்கிழமை வரை மொத்தம் 52 ஆயிரம் போ் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாகவும், இந்தக் கண்காட்சி 11 நாள்கள் நடைபெற உள்ளதாகவும் தோட்டக்கலைத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments