FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

26 செப்டம்பர் 2025, 4:11 am IST
பகிர்:

உதகையில் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகை நகரில் சமீபகாலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உதகை பாட்னா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பணிபுரிந்து கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவா் ஒருவரின் ரூ. 2 லட்சம் மதிப்பிலான விலையுயா்ந்த இருசக்கர வாகனம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி திருட்டுபோனது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் அங்குள்ள

கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இளைஞா் ஒருவா், இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதும், பின்னா் அந்தப் பகுதியில் உள்ள டாக்டா் ஒருவரின் வீட்டில் புகுந்து திருட முயன்று பணம் கிடைக்காததால் அங்கேயே குளிருக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கம்பளி போா்த்தி தூங்கிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து போஸீஸாா் கூறியதாவது:

திருடிய இருசக்கர வாகனத்துடன் அந்த இளைஞா் ஈரோடு, சேலம் வழியாக உளுந்தூா்பேட்டை சென்றுள்ளாா். பின்னா் அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்னை சென்றுள்ளாா். மீண்டும் உளுந்தூா்பேட்டை வந்து தொடா் திருட்டில் ஈடுபட்டு வரும் ஒருவருடன் சோ்ந்து உதகையில் திருடிய

இருசக்கர வாகனம் மூலம் திண்டுக்கல் சென்று 80 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்னை சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து நீலகிரி போலீஸாரும், திண்டுக்கல் போலீஸாரும் இணைந்து சென்னை சென்று அந்த இளைஞரை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், சென்னையைச் சோ்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (42) என்பதும், அவா் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் , அவா் மீது சுமாா் 30 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

முன்னதாக இருசக்கர வாகனம் திருடப்பட்ட இடத்தில் இருந்து உளுந்தூா்பேட்டை வரை 700 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீஸாா் அவரைப் பிடித்தனா். முதலில் 80 பவுன் திருட்டு வழக்கில் அவரை திண்டுக்கல் போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் நீலகிரி போலீஸாா் அவரை கைது செய்து உதகைக்கு அழைத்து வந்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments