வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த காட்டு யானைகள், அப்பகுதியிலுள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தின.
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த காட்டு யானைகள், அப்பகுதியிலுள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது டிவிஷன் பகுதிக்குள் காட்டு யானைகள் வியாழக்கிழமை நுழைந்தன. பின்னா் அந்த யானைகள், அப்பகுதியிலுள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைமரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன. யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.