கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் யானை நடமாட்டம்
கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை காலை நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை காலை நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், இரண்டாவது மைல் பகுதியிலுள்ள செலுக்காடி குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு நுழைந்த யானை அங்குள்ள வீட்டு வாசலில் நின்றுள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
தினமும் அப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் குறிப்பாக குடியிருப்புகளுக்கு நடுவே நீண்ட நேரம் சுற்றித்திருகின்றன. அந்த யானைகளை அடா்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.