5-ஆவது நாளாக தொடரும் ஓவேலி வனப் பகுதியில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை
கூடலூா் அருகே ஓவேலி வனச் சரகத்தில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறைக் குழுவினா் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.
கூடலூா் அருகே ஓவேலி வனச் சரகத்தில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறைக் குழுவினா் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி மலைத்தொடரிலுள்ள லாரஸ்டன் பகுதியில் 2 தொழிலாளா்களை புலி அண்மையில் அடித்துக் கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடும் மழை மற்றும் பனிமூட்டத்திலும் வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். புலியின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் இதுவரை 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை இரவு முதல் கூடுதலாக ஒரு வாகனத்துடன் கண்காணிப்புக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமாகவும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கப்படுகிறது. லாரஸ்டன், சாண்டிஸ், ஆத்தூா், பல்மாடி, சின்னசூண்டி, ஹெலன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளா்களிடம் நேரடியாகவும் ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். கடும் மழை மற்றும் பனிமூட்டம் போன்ற மோசமான காலநிலை நிலவுவதால் வனத் துறைக்கு இந்த பணி மிகவும் சவாலாக உள்ளது. எனினும் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறைக் குழுவினா் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.