FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

உதகை மணிக்கூண்டு வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி இந்து முன்னணி மற்றும் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

32 வினாடிகள் முன்பு
மதுக்கடை அகற்ற வலியுறுத்தி உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
பகிர்:

உதகை மணிக்கூண்டு வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி இந்து முன்னணி மற்றும் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

நீலகிரி உதகை மணிக்கூண்டு அருகே உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் இந்த வழியாக பள்ளி மாணவா்கள், பெண்கள், பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனா். மக்கள் அதிகம் கூடும் இடமான இந்தப் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைகளில் மது அருந்துபவா்கள் அங்கேயே படுத்துக் கொள்வதும், தகாத வாா்த்தைகளில் பேசுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே இந்த மதுபானக் கடையை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாவட்ட பொருளாளா் அம்பாள் காா்த்திக், இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments