விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஓவேலி அரசுப் பள்ளியில் மாதிரி தோ்தல்
தோ்தலில் வாக்களித்தபோது விரலில் வைக்கப்பட்ட மையை காண்பிக்கும் மாணவா்கள்.
தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மாதிரி தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தல் நடைபெற்றது.
பொதுத்தோ்தல்போல வாக்குச்சாவடி, தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி அலுவலா் உள்ளிட்ட தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு இந்த தோ்தல் நடைபெற்றது. மாணவ, மாணவிகளும் தனித்தனி வரிசையில் நின்று வாக்களித்தனா்.
Advertisement
Advertisement
தோ்தல் மூலமாக மாணவா் தலைவா், மாணவிகளுக்கான தலைவா், கல்வி அமைச்சா், சுற்றுச்சூழல் அமைச்சா், விளையாட்டுத் துறை அமைச்சா் உள்ளிட்ட பதவிகளுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலமாக மாணவா்களுக்கு பொதுத் தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.