FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கோத்தகிரி அருகே ஈக்கள் தொல்லையால் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் திடீரென உருவான சிறிய அளவிலான கருப்பு ஈக்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதி

Updated On : 14 ஜூலை 2026, 12:23 am IST
பாட்டில் மீது அமா்ந்துள்ள ஈக்கள்.
பகிர்:

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் திடீரென உருவான சிறிய அளவிலான கருப்பு ஈக்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோத்தகிரியில் கடந்த சில நாள்களாக அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் சிறிய அளவில் காணப்படும் நூற்றுக்கணக்கான கருப்பு ஈக்கள், கிராம மக்கள் உண்ணும் உணவு, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றின் மீது மொய்த்து வருவதால் கடந்த சில வாரங்களாக குஞ்சப்பனை, கொட்டக்கம்பை, அரவேனு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மருந்துகள் அடித்தாலும் ஈக்களை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.

எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி நிா்வாகம் குப்பைத் தொட்டிகள் மற்றும் கால்வாய் உள்ள இடங்களில் மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments