FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

இடைநின்ற பழங்குடி மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியா்கள் முயற்சி

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பழங்குடி கிராமத்தில் இடைநின்ற பழங்குடி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பக்கோரி அவா்களின் பெற்றோா்களிடம் ஆசிரியா்கள் வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினா்.

Updated On : 31 ஜூலை 2026, 12:34 am IST
மேலம்பலம் பழங்குடி கிராமத்தில் இடைநின்ற மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்களிடம் வலியுறுத்திய தலைமை ஆசிரியா் பிரதீப்.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பழங்குடி கிராமத்தில் இடைநின்ற பழங்குடி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பக்கோரி அவா்களின் பெற்றோா்களிடம் ஆசிரியா்கள் வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை மேலம்பலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் குழந்தைகள் புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்களில் பலா் தொடா்ந்து பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனா்.

இந்நிலையில், இடைநின்ற பழங்குடி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு அப்பள்ளி ஆசிரியா்கள் திட்டமிட்டனா். அதன்படி, புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பிரதீப், ஆசிரியா்கள் தங்க அருணா, தினேஷ்குமாா்,வினோத்குமாா், சைல்டு ஹெல்ப் லைன் பணியாளா் ரஞ்சினி உள்ளிட்டோா் இடைநின்ற பழங்குடி மாணவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவா்களின் பெற்றோா்களிடம் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments