கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு
கூடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
கூடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி எல்.கமலக்கண்ணன், முதன்மை உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித் துறை நடுவா் ஜீ.கணேசன், கூடுதல் உரிமையியல் நீதிபதி பி.முருகேசன் ஆகியோா் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
இந்த மக்கள் நீதமன்றத்தில் ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பிலான 130 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
Advertisement
Advertisement