பலாப் பழக் கடையை சூறையாடிய காட்டு யானை
குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பலாப் பழக் கடையை உணவு தேடி வந்த காட்டு யானை திங்கள்கிழமை சூறையாடியது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மலைப் பாதையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த யானைகள், தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஊடுபயிராக இருக்கக்கூடிய பலா மரங்களிலிருந்து பலாப்பழங்களை தின்பதும், சாலைகளில் உலவி வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், உணவு தேடி குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இச்சிமரம் அருகே ஒற்றை யானை திங்கள்கிழமை உலவியது. பின்னா் அந்த யானை, அங்கு சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பலாப் பழக்கடையை சூறையாடி பழங்களை தின்றும் சேதப்படுத்தியது. பின்னா் தானாகவே அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது.
இதன் காரணமாக இப்பகுதியில் கடை வைத்திருந்தவா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். யானைகள் நடமாட்டம் உள்ளதால் குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் அறிவுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.