கோத்தகிரி அருகே சாலையோர மரங்களில் பலாப் பழங்களை சுவைக்கும் காட்டு யானை
கோத்திகிரி அருகே சாலையோர மரங்களில் காய்த்துள்ள பலாப் பழங்களை சுவைக்கும் காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்தப் பழங்களை சுவைப்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பணை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் குஞ்சப்பணை அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஊடு பயிராக உள்ள பலா மரங்களில் உயரத்தில் காய்த்துள்ள பலாப் பழங்களை ஞாயிற்றுக்கிழமை காட்டு யானை பறித்து சாப்பிடுவதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.