FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்று மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் வருமாறு:

திருப்பூர் தெற்கு தாலுகாவில் தொங்குட்டிபாளையம், மசநல்லாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருப்பூர் வடக்கு தாலுகாவில் பொங்குபாளையம் ஊராட்சி மன்றக் கட்டட வளாகம், அவிநாசி தாலுகாவில் பெருமாநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம், ஊத்துக்குளி தாலுகாவில் விருமாண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், பல்லடம் தாலுகாவில் காட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தாராபுரம் தாலுகாவில் நல்லாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், காங்கயம் தாலுகாவில் காங்கயம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், வட்டமலை கிராம நிர்வாக அலுவலகம், உடுமலை தாலுகாவில் வடபூதி நத்தம் ஊராட்சி மன்றக் கட்டட வளாகம், மடத்துக்குளம் தாலுகாவில் கடத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் நடைபெறும்.

Advertisement

Advertisement

இதில், பொதுமக்கள் பங்கேற்றுப் பயனடைலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments