பல்லடத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்
பல்லடம் பகுதி மின் நுகர்வோர்களுக்கான குறைகேட்பு முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெறவுள்ளது.
பல்லடம் பகுதி மின் நுகர்வோர்களுக்கான குறைகேட்பு முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்ததாவது:
பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து நிவர்த்தி காணலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.