முருங்கை விதை கிலோ ரூ.350க்கு விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் முருங்கை விதை கிலோ ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் முருங்கை விதை கிலோ ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முருங்கைக் காய்கள் அருகிலுள்ள சந்தைகளில் விற்கப்படுகின்றன. சந்தையில் வரத்து அதிகரிக்கும் போது காய்களுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் மாற்று முயற்சியாகக் காய்களைப் பறிக்காமல் மரங்களிலேயே முற்ற விட்டு, அவற்றிலிருந்து விதைகளை எடுத்து வெயிலில் காய வைத்து விற்கப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ விதை ரூ.350க்கு விற்கப்படுகிறது. முருங்கை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தோல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகவும், அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.