முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைப்பு

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

Updated On : 18 ஆகஸ்ட் 2024, 12:46 am IST
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து முத்தூா் சாலையில் அடைக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனை.
பகிர்:

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவத் துறையினா் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மருத்துவமனைகள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

அதன்படி, வெள்ளக்கோவிலில் 21 மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை அவசரமில்லா சேவைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதனால், பல நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments