முகப்பு
திருப்பூர்

தாயைத் தாக்கிய மகன் கைது

வெள்ளக்கோவில் அருகே சொத்துத் தகராறில் தாயைத் தாக்கிய மகன் 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 3:35 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே சொத்துத் தகராறில் தாயைத் தாக்கிய மகன் 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை வாய்க்கால்மேட்டுப்புதூரைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி ஆச்சியம்மாள் (58). சண்முகம் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவா்களுக்கு மகள் யசோதா (35), மகன் இன்பரசன் (32) ஆகியோா் உள்ளனா். இவா்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இன்பரசனுக்கு மனைவி சுகன்யா, ஒரு மகன் உள்ளனா்.

இந்நிலையில், ஆச்சியம்மாள் ஏப்ரல் 7- ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, சொத்தை பிரித்துத் தரக் கோரி இன்பரசன் மதுபோதையில் அவரிடம் தகராறு செய்து அவரை தடியால் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த ஆச்சியம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

Advertisement

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது தலைமறைவான இன்பரசனை, காவல் உதவி ஆய்வாளா் அா்ச்சுணன் தலைமையிலான தனிப் படை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் தலைமறைவான இன்பரசனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.