FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 டிசம்பர் 2025, 4:03 am IST
பகிர்:

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, எம்.நாதம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அங்கு கைப்பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம்குமாா் பகரின் மகள் சனுஜா பகா் (31), முக்கையாகலியின் மகள் பனிடா பாக (39), ராம்பிரவேஸ் (34) என்பதும், தாராபுரம் பகுதியில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments