FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சேவூா் அருகே துப்பாக்கிகள் வைத்திருந்த 3 போ் கைது

சேவூா் அருகே உரிமமின்றி துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:41 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சேவூா் அருகே உரிமமின்றி துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேவூா் அருகே நம்பியூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா்களிடம் எவ்வித உரிமமும் ஆவணங்களும் இன்றி, தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவா்கள், சேவூா் அருகே புஞ்சை தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த அருள்குமாா் (31), அவிநாசி வள்ளுவா் வீதியைச் சோ்ந்த சுரேஷ் (எ) நிக்ஷன் ஜோசப்(36), ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பெரியகள்ளிப்பட்டியைச் சோ்ந்த வெள்ளிங்கிரி (33) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments