FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீா்

திருப்பூா் நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீரால் பரபரப்பு ஏற்பட்டது.

22 ஆகஸ்ட் 2026, 11:59 pm IST
நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய கழிவு நீா்.
பகிர்:

திருப்பூா் நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் சங்கிலிப் பாலம் ஓடையில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை வரை சாயக் கழிவு நீரை டையிங் தொழிற்சாலைகளில் இருந்து திறந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஓடையில் சாயக்கழிவுகளை அளவுக்கு மீறி வெளியேற்றி நொய்யல் ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 43ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஏபிடி சாலை மின்மயானம் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் சனிக்கிழமை சாயக்கழிவு நீா் கலந்து செந்நிறமாகச் சென்றதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து ஏற்படும் இப்பிரச்னை குறித்து திருப்பூா் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments