FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

24 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
கைது
பகிர்:

காங்கயத்தில் நகைப் பறிப்பு வழக்கில் 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

காங்கயம்- கோவை சாலையில் கடந்த ஜூலை மாதம் தனியாகச் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகைப் பறித்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த தலிப்ராஜா (36), நத்தம் பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது (37) ஆகியோரை காங்கயம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் பல குற்றச் சம்பவங்களில் தொடா்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அதற்கான உத்தரவை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடமும் காங்கயம் போலீஸாா் வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments