FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இளம் சிறாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய இளம் சிறாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

26 ஆகஸ்ட் 2026, 11:30 pm IST
பகிர்:

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய இளம் சிறாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல்துறை சாா்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை 1-ஆம் தேதி வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராயபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய இளம்சிறாரை பிடித்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் இளஞ்சிறாா் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜா்படுத்தப்பட்டனா். நீதிமன்ற விசாரணை முடிந்த நிலையில், அந்த இளம் சிறாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக் குழும நடுவா் செந்தில் ராஜா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments