FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அமராவதி ஆற்றங்கரையில் காட்டுத் தீ

11 வினாடிகள் முன்பு
தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்ட தீ விபத்து.
பகிர்:

அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள காய்ந்த புற்களில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது.

தாராபுரம்-கரூா் சாலை, ஈஸ்வரன் கோயில் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் சனிக்கிழமை இரவு ஆற்றங்கரையோரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இந்த ஆற்றில் நீா்வரத்து இல்லாமல் வடு கிடப்பதால், கரையோரத்தில் காய்ந்திருக்கும் சருகுகள், புற்கள், செடி, கொடிகள் மற்றும் புதா்களில் தீ வேகமாகப் பரவியது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தாராபுரம் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments