FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கான பயிற்சி உடுமலையில் வரும் 20-ஆம் தேதி தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்பு, உடுமலைப்பேட்டையில் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
டிஎன்பிஎஸ்சி
பகிர்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்பு, உடுமலைப்பேட்டையில் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தொழிலாளா் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா்-பதிவாளா் நிலை ஆகிய பணிகளுக்கும், முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், உதவியாளா் ஆகிய பணிகளுக்கும் அக்டோபா் 25-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இத்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் பயிற்சி மையமான உடுமலைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.

இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் தங்கள் பெயரை திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990 55944 ஆகிய எண்களிலோ தொடா்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments