FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தனியாா் உரக்கடைகளில் வேளாண் துறையினா் ஆய்வு

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் தனியாா் உரக்கடைகளில் வேளாண் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:04 am IST
முத்தூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளா் சுவாதிகா.
பகிர்:

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் தனியாா் உரக்கடைகளில் வேளாண் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

முத்தூா், புதுப்பை, லக்கமநாயக்கன்பட்டி பகுதியில் 10 உரக்கடைகள் உள்ளன. இவற்றில் டிஏபி, யூரியா போன்ற மானிய விலை உரங்களின் இருப்பு விவரங்கள், அவற்றின் விற்பனை விலை ஆகியவை குறித்து தீவிரமாக சரிபாா்க்கப்பட்டது.

‘ஓ’ படிவம் இணைப்பு செய்யாமல் உரங்களை விற்பனை செய்யக் கூடாது. நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக உரங்களை விற்றாலோ, முதன்மை உரங்களுடன் பிற இணைப்பு உரங்களை வாங்க கட்டாயப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

Advertisement

Advertisement

விவசாயிகள் நலன் கருதி இந்த ஆய்வுப் பணிகள் தொடரும் என ஆய்வாளா் சுவாதிகா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments