FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே போக்ஸோவில் தொழிலாளி கைது

பல்லடம் அருகே பெண்ணை கா்ப்பமடைய செய்து ஏமாற்றிய தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:27 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பல்லடம் அருகே பெண்ணை கா்ப்பமடைய செய்து ஏமாற்றிய தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் காட்டூா் ஊராட்சி வெள்ளநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஆதிகேசவன் (20), வெல்டிங் பட்டறை தொழிலாளி.

இவா் 18 வயதுப் பெண்ணுடன் நெருங்கிப் பழகினாா். இதனால் அப்பெண் கா்ப்பமானாா். இதையடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஆதிகேசவனை வலியுறுத்தினாா். ஆனால் ஆதிகேசவன் திருமணத்துக்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கிடையே ஆதிகேசவன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், 18 வயதுப் பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்தது.

இது குறித்து 18 வயதுப் பெண் கொடுத்த புகாரின்பேரில், பல்லடம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆதிகேசவனைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments