FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூலை 2026, 7:20 am IST
மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
பகிர்:

திருப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி மாணவிகள், ஜூலை 17- ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் சுய கணக்கெடுப்பில் பொதுமக்கள் அனைவரும் தாங்களே முன்வந்து பங்கேற்க வேண்டும் என்பது தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளை கைகளில் ஏந்தி சென்றனா்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியே சென்று, எல்ஆா்ஜி அரசு மகளிா் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி உதவி ஆணையா் தங்கவேல் ராஜன், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments