FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சாலையில் செல்வோரை கடித்துக் குதறும் வளா்ப்பு நாய்: உரிமையாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Updated On : 21 ஜூலை 2026, 1:54 am IST
நாய் - Center-Center-Trivandrum
பகிர்:

திருப்பூரில் சாலையில் செல்வோரை கடித்துக் குதறும் வளா்ப்பு நாயின் உரிமையாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா்- தாராபுரம் சாலை, செட்டிபாளையம் அருகேயுள்ள அமராவதி நகா் பகுதியில் வசித்து வரும் பெண், நாய் ஒன்றை வளா்த்து வருகிறாா். அவா், நாயை முறையாக கட்டி வைக்காமல் தெருவில் விடுவதால், அந்த நாய் அவ்வழியே செல்வோரை துரத்தி கடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணிடம் பலமுறை முறையிட்டும் அவா் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த லதா என்ற பெண்ணை அந்த நாய் ஞாயிற்றுக்கிழமை துரத்தி கடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நாயின் உரிமையாளரை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இது குறித்து மாநகராட்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments