நாகா்கோவில் ரயில் திருப்பூா் வழியாக இயக்கப்படாது
நாகா்கோவில் ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை திருப்பூா் வழியாக இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை திருப்பூா் வழியாக இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையிலிருந்து தினந்தோறும் காலை 8 மணிக்குப் புறப்பட்டு வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா் வழியாக திருப்பூா், ஈரோடு, கரூா் சென்று நாகா்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கரூா்- மூா்த்திபாளையம் இடையே நடைபெறும் பராமரிப்புப் பணிகளின் காரணமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.