வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
வெள்ளக்கோவிலில் சேதமடைந்துள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவிலில் சேதமடைந்துள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில்-காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையத்தை அடுத்த பெட்ரோல் பங்க் அருகில் தாா் சாலை சேதமடைந்துள்ளது. ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில், பல்வேறு இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன.
இதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா். பலா் கீழே விழுந்து காயமடைந்துள்ளனா். சாலையை உடனடியாக சீரமைத்து வாகன ஓட்டிகளை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement