முகப்பு
திருப்பூர்

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி விழிப்புணா்வு

காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை தொற்று நோய்களுக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 3:55 am IST
காங்கயம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வுப் பிரசாரத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை தொற்று நோய்களுக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) டாக்டா் தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், ‘பிரேக் ஃப்ரீ’ இந்தியா என்ற செயலியை பதிவிறக்கும் செய்து, பால்வினை தொற்று நோய்களுக்கான சந்தேகங்களை கேட்டு பொதுமக்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என மருத்துவா்கள் விளக்கினா்.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் காா்த்திகேயன், சௌமியா, முத்துமதி, செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி, எக்ஸ்ரே நிபுணா் லாவண்யா, பால்வினை தொற்று ஆலோசகா் கருப்புசாமி, அலுவலா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments