FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கள் விற்பனை: விவசாயி மீது வழக்கு

பல்லடம் அருகே கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட விவசாயி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

பல்லடம் அருகே கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட விவசாயி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பல்லடம், ராயா்பாளையம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பல்லடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, பழனிசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடமிருந்த 6 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments