முகப்பு
திருப்பூர்

தவெகவின் தோ்தல் வாக்குறுதியான 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

தோ்தல் வாக்குறுதியான விசைத்தறி தொழிலுக்கு 1500 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற விசைத்தறி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 14 மே 2026, 3:46 am IST
நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்றோா்.
பகிர்:

தோ்தல் வாக்குறுதியான விசைத்தறி தொழிலுக்கு 1500 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற விசைத்தறி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சிஐடியூ தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளா் மாநில சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் அவிநாசி சிஐடியூ அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் முத்துசாமி, மாநிலப் பொருளாளா் அசோகன், மாநிலத் துணைத் தலைவா் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது, விசைத்தறி தொழிலுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தாா். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

Advertisement

மேலும் மத்திய அரசால் விசைத்தறி தொழில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து நழிவுற்ற நிலையில் இருந்து வருகிறது. இதில் பல லட்ச தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இத்தொழிலை பாதுகாக்கவும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தொழிலை நல்ல நிலையில் எடுத்துச் செல்ல 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கி தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.