நாய்கள் கடித்து 2 மான்கள் உயிரிழப்பு
அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் மான் ஒன்று வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தது. இதைப் பாா்த்த தெருநாய்கள் அந்த மானை துரத்தி கடித்தன. இதேபோல, பாரதி நகா் பகுதியில் சுற்றித் திரிந்த மானையும் தெருநாய்கள் கடித்தன.
2 மான்களும் உயிரிழந்த நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மான்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக தெக்கலூா் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கூறாய்வு முடிந்த பின், புதுப்பாளையம் வனப் பகுதியில் மான்களின் உடல்கள் புதைக்கப்பட்டன.